அன்பின் நண்பர்களே !
எனது மூத்த மகள் இலண்டனில் குடும்பம் நடத்துவதைப் பார்த்த பின் எனது துணைவி எழுதிய கவிதை
கால்களில் சக்கரம் சுழலும் !
கைகளோ காற்றிலும் சீறும் !
அடுக்களையில் அவள் !
அடுத்தடுத்து என்ன வென்று
அலைபாயும் சிந்தனை !
கண்மணிகள் நாவற்பழமாய் !
தேன்வண்டாய் ரீங்காரம் !
சிந்தும் மழலையின் சிந்தனை !
சிறிய பூவோ சிட்டாய்ப் பறந்திடும் !
சின்னக் கால்களும் கைகளும்
சித்திரமாய் வளைந்திடும் !
“நாடி”யின் நாட்டம் நற்பண்பு !
பார்த்துப் பார்த்து பயிலும் !
பாங்காய் அனைத்தும் சொல்லும் !
நாட்டம் எல்லாம் பள்ளிக்கோயிலிலே !
நாளும் ஓடும் பெற்றோர்
நன்மழலை முகம் பார்த்து மகிழ்வர் !
அன்பு மகளோ அன்னை தந்தைக்கு
தலைமகள் ! நன்றாய் ஒன்றாய்
சிந்திக்கும் ! நடைமுறை எல்லாம்
தந்தையின் பயிற்சி !
அன்னையின் அன்பு
கண்டிப்பாய் கண்மணிகளைக் காக்கும் !
அன்புத்தலைவன் ஆற்றல் மேலும் சிறக்கவே
ஆனை முகனும் கருணை புரிவான்.
ஆடிப் பாடும் அகிலமே
அனைவர்க்கும் அரவணைப்பு !
சுற்றும் உலகில் நாமுமே
சுழலும் காற்றாய் இயங்கிடுவோம் !
இனிதே சிறகக் இல்லறம்
இறைவன் என்றும் அருள் புரிவான் !
” நாடி ” : மூத்த பேத்தியின் செல்லப் பெயர்
ஆக்கம் : செல்வி ஷங்கர்
7:25 முப இல் திசெம்பர் 1, 2009 |
சோதனை ,மறுமொழி
4:44 பிப இல் திசெம்பர் 1, 2009 |
நல்லாருக்கு சார்!
5:17 பிப இல் திசெம்பர் 1, 2009 |
நன்றி வால் வருகைக்கும் கருத்துக்கும்
4:45 பிப இல் திசெம்பர் 1, 2009 |
அழகிய கவிதை சீனா.
படிக்க இனிமை.. நாடியை கேட்டதாக சொல்..
நன்றி,
ரங்கன்
5:16 பிப இல் திசெம்பர் 1, 2009 |
நன்றி ரங்கா – வருகைக்கும் கருத்துக்கும்
1:14 பிப இல் மே 13, 2012 |
கவிதையின் தலைப்பும் கவிதையும் மிக அருமை. நாடி – கேட்டிராத அன்புச் சொல்.
3:25 பிப இல் மே 13, 2012 |
அன்பின் ஆருத்ரா – வருகைக்கும் கருத்துக்கும் நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா